நெடுநேரம் உள்ளங்கையில் ஏந்தியிருந்தேன்
என் ஒற்றைக் கண்ணீர்த்துளி
உற்று நோக்கிக்கொண்டிருந்தேன்
ஆவிப்புகை மீண்ட கண்ணாடி பிம்பம் போல
அதன் மேலே மெல்லத்தெரிகின்றன
ஆயிரம் கதைகளும்
சில உடைந்த மெல்லிய இதயங்களும்
ஒட்டுப்போட்ட உறவுகளும்
காயப்பட்ட கனவுகளும்
வலி தீண்டிய நினைவுகளும்
நீண்ட அவதானிப்பின் பின்னிரவில்
கண்ணீர்த்துளி கரைகிறது
தன் இறுதிப்பிரதிபலிப்பாய்
அனுபவப்புன்னகையொன்றை
பரிசளித்தபடி..
மாயா

கருத்துகள்

மிளிர் பதிவுகள்