சுயம்
ஒவ்வோரு கணமும் பெருக்கிறது
என்னைத்தனக்குள் அமிழ்த்துகிறது
இருளிலும் மருட்டும் தவிர்க்கமுடியா நிழல்
கடும்பசி கொண்டலையும் பேயன்ன அழல்
கண்ணாடியில் உமிழ்கிறேன் எனக்கு பதில்
அங்கே அதன் பிம்பம் உரக்கச்சிரிப்பதால்
நொடி தோறும் உணவுகேட்கிறது
மனம் உண்டு செறிக்கிறது
அந்த நிழல் இன்றி இந்த நிஜம் இல்லை
அதைத்தொலைக்கும் வழி தெரியவில்லை
கண்ணீர் வடிக்கும் என்னைப்பார்த்து
கைகொட்டிச்சிரிக்கிறது என் சுயம்
-மாயா
கருத்துகள்
கருத்துரையிடுக